ADDED : ஜூன் 10, 2025 10:08 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி அருகே மனைவியைக் காணவில்லை என கணவர், போலீசில் புகார் அளித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி அடுத்த சிறுவங்கூரைச் சேர்ந்தவர் பாண்டிதுரை மகள் சுவேதா, 21; இருவருக்கும் கடந்த 2022ம் ஆண்டு திருமணம் நடந்தது. கடந்த 8ம் தேதி இரவு குளிர்பானம் வாங்க கடைக்குச் சென்ற பாண்டிதுரை, வீட்டிற்கு வந்து பார்த்த போது, சுவேதா இல்லாததால் அதிர்ச்சியடைதார். பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
பாண்டிதுரை அளித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.