sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மனைவியை காணவில்லை: சிறை கைதி போலீசில் புகார்

/

மனைவியை காணவில்லை: சிறை கைதி போலீசில் புகார்

மனைவியை காணவில்லை: சிறை கைதி போலீசில் புகார்

மனைவியை காணவில்லை: சிறை கைதி போலீசில் புகார்


ADDED : டிச 26, 2024 07:01 AM

Google News

ADDED : டிச 26, 2024 07:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : சித்தலுாரில் காணாமல் போன மனைவியை கண்டுபிடித்து தரக்கோரி, சிறையில் உள்ள கணவன் போலீசில் புகார் அளித்துள்ளார்.

வரஞ்சரம் அடுத்த சித்தலுார் கிராமத்தை சேர்ந்தவர் வெள்ளையன் மனைவி அலமேலு,35; வெள்ளையன் கடந்த 2012ம் ஆண்டு நடந்த குற்ற வழக்கில் தண்டனை பெற்று, தற்போது சேலம் மத்திய சிறையில் உள்ளார். இவர் காவல்துறைக்கு கோரிக்கை மனு அளிப்பது தொடர்பாக, மனைவி அலமேலுவை போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால், அலமேலு பேசவில்லை.

இதனால் சந்தேகமடைந்த வெள்ளையன், தனது சகோதரர் ஆண்டவன் என்பவரை தொடர்பு கொண்டு மனைவி அலமேலு குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 2 வாரங்களாக அலமேலுவை காணவில்லை, பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை என ஆண்டவன் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, காணாமல் போனை மனைவி அலமேலுவை கண்டுபிடித்து தரக்கோரி சிறையில் உள்ள வெள்ளையன் கடிதம் மூலமாக போலீசாருக்கு புகார் அளித்தார். அதன்பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us