ADDED : ஜன 07, 2024 05:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார்: அரகண்டநல்லுார் அருகே குடிகார கணவரால் மனமுடைந்த மனைவி துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அரகண்டநல்லுார் அடுத்த கொடுக்கப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் லாரன்ஸ் மனைவி வேளாங்கண்ணி ஜெசிந்தாமேரி, 30; இவர்களுக்கு கடந்த 2017ம் ஆண்டு திருமணம் நடந்தது. இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
குடிப்பழக்கம் உடைய லாரன்ஸ் குடித்து விட்டு, மனைவியிடம் மேலும் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதனால், மனமுடைந்த வேளாங்கண்ணி ஜெசிந்தாமேரி நேற்று முன்தினம் வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புகாரின் பேரில், அரகண்டநல்லுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.