ADDED : டிச 27, 2024 11:15 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே மாயமான பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த சிறுவங்கூர் புதுகாலனியை சேர்ந் தவர் குமார் மனைவி ஜோதி, 35; இவர் கடந்த 17ம் தேதி காலை 9 மணிக்கு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை.
இதனையடுத்து அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் அவர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை.
இது குறித்து குமார் கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.