ADDED : ஜன 20, 2025 04:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னசேலம் : மனைவியை காணவில்லை என கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
சின்னசேலம் அடுத்த புக்கரவாரி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிக்கண்ணன். இவரது மனைவி பவானி,23; இவர்களுக்கு திருமணமாகி மூன்றாண்டாகிறது.
கடந்த 11ம் தேதி தாய் வீட்டிற்கு சென்ற பாவானி, அன்று இரவு 11:00 மணிக்கு வீட்டில் இருந்து வெளிய சென்றவர் வீடு திரும்பவில்லை.
சின்னசேலம் அடுத்த பெரிய சிறுவத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 17 வயதுடைய பிளஸ் 2 மாணவி நேற்று அதிகாலை, தோப்பிற்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்த புகார்களின்பேரில் முறையே கீழக்குப்பம் மற்றும் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.