ADDED : மே 10, 2025 12:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் காணாமல் போன இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி வாய்க்கால் மேட்டு தெருவை சேர்ந்தவர் மணி மனைவி சத்யா,26; இவர்களுக்கு திருமணமாகி, 2 குழந்தைகள் உள்ளனர்.
கடந்த, 3ம் தேதி மணி வழக்கம்போல் கூலி வேலைக்கு சென்றார். தொடர்ந்து, மாலை பணி முடிந்து வீட்டிற்கு வந்து பார்த்த போது, சத்யாவை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்தவர் பல்வேறு இடங்களில் அவரை தேடினார்.
இது குறித்து அவர் கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.