/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கபிலருக்கு தொல்லியல் அருங்காட்சியம் அமைக்கப்படுமா? திருக்கோவிலுார் தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை
/
கபிலருக்கு தொல்லியல் அருங்காட்சியம் அமைக்கப்படுமா? திருக்கோவிலுார் தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை
கபிலருக்கு தொல்லியல் அருங்காட்சியம் அமைக்கப்படுமா? திருக்கோவிலுார் தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை
கபிலருக்கு தொல்லியல் அருங்காட்சியம் அமைக்கப்படுமா? திருக்கோவிலுார் தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை
ADDED : ஜன 30, 2025 11:05 PM

திருக்கோவிலூர் வரலாற்று சிறப்புமிக்க நகரம். பாரியின் உற்ற நண்பனான கபிலன், பாரியின் மகள்களான அங்கவை, சங்கவை இருவரையும் திருக்கோவிலூர் அழைத்து வந்து மலையமான் நாட்டு மன்னர்களுக்கு மணமுடித்து வைத்தார்.
சங்கப் புலவர்களில் குறிப்பிடத்தக்கவர். சங்க இலக்கியப் பாடல்கள் அதிகம் பாடியவர். தன் கடமை முடிந்த விரக்தியில் தென்பெண்ணையாற்றின் நடுவில் இருக்கும் குன்றில் உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்தார் என்பது வரலாறு.
இதற்கான வரலாற்று சான்றுகளாக வீரட்டானேஸ்வரர் கோவில் கருவறை சுவற்றில் கல்வெட்டு பதியப்பட்டுள்ளது.
கபிலர் உயிர் நீத்த குன்றின் மீது உள்ள கோபுரம்தான் திருக்கோவிலூரின் அடையாளமாக இன்றும் கம்பீரமாக காட்சியளிக்கிறது. இதன் காரணமாக இப்பகுதியில் கபிலருக்கு நினைவகம் அமைக்க வேண்டும் என்பது தமிழ் ஆர்வலர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.
கடந்த ஆட்சியாளர்கள், அரைகுறையாக பெயருக்காக கபிலருக்கு நினைவு தூண் ஒன்றை கட்டிச் சென்றனர். இன்றைய ஆட்சியாளர்கள் அதனையும் திறந்து வைத்தனர். அத்துடன் தமிழ் அறிஞர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதாக அரசு அமைதியாகிவிட்டது.
கபிலர் குன்றை புனரமைத்து, சங்கப் புலவன் கபிலனின் பெருமையை பறைசாற்றும் வகையில், நினைவு மண்டபம் அமைக்க வேண்டும். இதன் கூடவே 1994ம் ஆண்டு தொல்லியல் துறை ஆய்வு மேற்கொண்டதில் கிடைத்த பொருட்களுடன் திருக்கோவிலூர் சுற்றுவட்டார பகுதியில் இருக்கும் கல்வெட்டுக்களின் தகவல்கள் உள்ளடக்கிய காட்சியகம் ஒன்று தற்பொழுது கீழையூரில் தொல்லியல் துறையின் வாடகை கட்டிடத்தில் பூட்டி வைக்கப்பட்டுள்ளது.
இதனை புதியதாக அமைக்கும் கபிலர் நினைவு அரங்கில் அமையும் வகையில் உருவாக்கினால் திருக்கோவிலூருக்கும் பெருமை, சங்கப் புலவனுக்கும் புகழ்.
தற்கால தலைவர்களுக்கெல்லாம் நினைவகம், மணிமண்டபம் அமைக்கும் அரசு சங்கப் புலவனுக்கு நினைவகம் அமைக்க நடவடிக்கை எடுக்குமா? என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர் திருக்கோவிலூர் பகுதி தமிழ் ஆர்வலர்கள்.

