sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பழுதான கண்காணிப்பு கேமராக்கள் சீரமைக்கப்படுமா? குற்ற சம்பவங்கள் அதிகரிக்கும் அபாயம்

/

பழுதான கண்காணிப்பு கேமராக்கள் சீரமைக்கப்படுமா? குற்ற சம்பவங்கள் அதிகரிக்கும் அபாயம்

பழுதான கண்காணிப்பு கேமராக்கள் சீரமைக்கப்படுமா? குற்ற சம்பவங்கள் அதிகரிக்கும் அபாயம்

பழுதான கண்காணிப்பு கேமராக்கள் சீரமைக்கப்படுமா? குற்ற சம்பவங்கள் அதிகரிக்கும் அபாயம்


ADDED : பிப் 10, 2025 10:50 PM

Google News

ADDED : பிப் 10, 2025 10:50 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி நகரம், கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்டவைகளை அதிகம் கொண்ட, போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக உள்ளது.

இதனால் நகரத்திற்கு நாள்தோறும் வந்து செல்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

நகர பகுதியில் காவல்துறை சார்பில் குற்ற நடவடிக்கைகளை கண்காணிக்கும் பொருட்டு, பஸ் ஸ்டாண்ட், நான்கு முனை சந்திப்பு, மார்க்கெட் பகுதி, மணிகூண்டு, அரசு மருத்துவமனை, நகரின் நுழைவு வாயில்கள், நான்கு முக்கிய சாலைகள் என, 50க்கும் மேற்பட்ட இடங்களில் 110 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த கேமராக்கள், சூரிய ஒளி மற்றும் மின்சாரம் மூலம் இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து கேமராக்களையும், கண்காணிக்கும் கட்டுப்பாட்டு அறை, கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் இயங்கி வருகிறது.

கேமராக்கள் பழுது


குற்றங்களைத் தடுப்பதிலும், கண்டறிவதிலும் முக்கிய பங்காற்றி வரும் இந்த கேமராக்களில், பெரும்பாலானவை தற்போது பழுதடைந்துள்ளன. 110 கேமராக்களில் 25 கேமராக்கள் மட்டுமே செயல்பட்டில் உள்ளது.

இதனால் கள்ளக்குறிச்சி காவல் நிலைய கட்டுப்பாட்டு அறையில், 'மானிட்டரிங் ஸ்கிரீனில்' குறிப்பிட்ட சில இடங்களை தவிர மற்ற பகுதிகள், சிக்னல் இல்லாமல் வெறுமையாகவே உள்ளன.

போலீசாரின் மூன்றாவது கண்ணாக விளங்கும் கண்காணிப்பு கேமராக்கள் பழுதாகி பல நாட்கள் ஆகியும், அவற்றை சரி செய்ய இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

கண்காணிப்பு கேமராக்கள் பழுதாகியுள்ள பகுதிகளில், திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோரையும், விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் செல்லும் வாகனங்களை கண்டறிவதிலும் சிக்கல் எழுந்துள்ளது.

அதுமட்டுமில்லாமல், செயலிழந்த கண்காணிப்பு கேமராக்களால், நகரில் குற்றச்சம்பவங்கள் பெருகுவதற்காக வழி வகையும் அதிகரித்துள்ளது.

எனவே, பழுதான கேமராக்களை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us