sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கள்ளக்குறிச்சியில் பழுதான கண்காணிப்பு கேமராக்கள் சீரமைக்கப்படுமா?

/

கள்ளக்குறிச்சியில் பழுதான கண்காணிப்பு கேமராக்கள் சீரமைக்கப்படுமா?

கள்ளக்குறிச்சியில் பழுதான கண்காணிப்பு கேமராக்கள் சீரமைக்கப்படுமா?

கள்ளக்குறிச்சியில் பழுதான கண்காணிப்பு கேமராக்கள் சீரமைக்கப்படுமா?


ADDED : ஜூன் 18, 2024 11:57 PM

Google News

ADDED : ஜூன் 18, 2024 11:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி நகர பகுதியில் பழுதாகியுள்ள கண்காணிப்பு கேமராக்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கள்ளக்குறிச்சி நகரம் போக்குவரத்து நெரிசல் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் கொண்ட பகுதியாக உள்ளது. மாவட்ட தலைநகரமாக விளங்கும் இங்கு கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு ஏராளமானோர் தினமும் வந்து செல்கின்றனர்.

நகரப் பகுதியில் நடைபெறும் குற்ற நடவடிக்கைகளை கண்காணிக்கும் பொருட்டு காவல் துறை சார்பில், நான்கு முனை சந்திப்பு, பஸ் நிலையம், மார்க்கெட் பகுதி, மணிக்கூண்டு, அரசு மருத்துவமனை, நகரின் நுழைவு வாயில்கள், முக்கிய சாலைகள் என, 50க்கும் மேற்பட்ட இடங்களில் 100க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை பொருத்தப்பட்டுள்ளன. இவை குற்ற தடுப்பு பணிகளில் பெரும் உதவியாக உள்ளன.

சூரிய ஒளி மற்றும் மின்சாரம் மூலம் இயங்க கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ள கேமராக்களை கண்காணிக்கும் கட்டுப்பாட்டு அறை கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் முறையான பராமரிப்பு இன்மை காரணமாக பெரும்பாலான கண்காணிப்பு கேமராக்கள் பழுதடைந்து உள்ளன.

கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் உள்ள மானிடரிங் ஸ்கிரீனில் பெரும்பாலான கண்காணிப்பு கேமராக்கள் சிக்னல் இன்றி வெறுமையாக காணப்படுகிறது. குற்ற சம்பவங்களை கண்டறிவதில் போலீசாரின் மூன்றாவது கண்ணாக விளங்கும் சி.சி.டி.வி., கேமராக்கள் பழுதாகி உள்ள நிலையில், அவற்றை சீரமைக்க அதிக தொகை தேவை என்பதால், வெறும் காட்சிப்பொருளாக உள்ளன.

கள்ளக்குறிச்சி பகுதியில் திருட்டு, வழிப்பறி, அடையாளம் தெரியாத வாகன விபத்து போன்ற பல்வேறு நிகழ்வுகளில் குற்றவாளிகளை விரைந்து அடையாளம் காணமுடியாமல் போகிறது. குற்ற தடுப்பு பணிகளிலும் தொய்வு ஏற்படுகிறது.

கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும், பழுதானவற்றை சீரமைக்கவும் அரசு சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யாத நிலையில், காவல் துறையினர் பெரும் வணிக நிறுவனங்கள், உள்ளூர் தொழிலதிபர்களை நாட வேண்டியநிலை உள்ளது.

எனவே, கள்ளக்குறிச்சியில் பழுதடைந்துள்ள கண்காணிப்பு கேமராக்களை உடனடியாக சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us