sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மஞ்சள் வாரச் சந்தை மீண்டும்... துவங்கப்படுமா?

/

மஞ்சள் வாரச் சந்தை மீண்டும்... துவங்கப்படுமா?

மஞ்சள் வாரச் சந்தை மீண்டும்... துவங்கப்படுமா?

மஞ்சள் வாரச் சந்தை மீண்டும்... துவங்கப்படுமா?


ADDED : ஜன 20, 2025 04:50 AM

Google News

ADDED : ஜன 20, 2025 04:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மஞ்சள் சாகுபடி பரப்பளவை அதிகரிக்க மீண்டும் மஞ்சள் வாரச் சந்தையை துவங்க கலெக்டர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயம் முக்கிய பிரதான தொழிலாக உள்ளது. மாவட்டத்தில் 5000க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் மஞ்சள் சாகுபடி செய்யப்படு கிறது. இங்கு சாகுபடி செய்யப்படும் மஞ்சள் சேலம், ஈரோடு மாவட்டங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப் படுகிறது.

சில சமயங்களில் மஞ்சள் உற்பத்தியாளர்கள் சங்கம் மூலம் வியாபாரிகள் நேரடியாக விவசாயிகளிடமிருந்து மஞ்சளை கொள்முதல் செய்கின்றனர். பணப்பயிராக விளங்கும் மஞ்சள் சாகுபடி செய் வதில், விவசாயிகள் அதிகளவில் ஆர்வம் காட்டுகின்றனர்.

பத்து மாத பயிரான மஞ்சள் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை மாதங்களில் சாகுபடி செய்து, ஜனவரி, பிப்., மாதங்களில் அறுவடை செய்யப்படுகிறது. பின்னர் அதனை அவியல் போட்டு (வேக வைத்து) பதப்படுத்தி விற்பனைக்கு எடுத்து செல்கின்றனர்.

வெளி மாவட்டங்களுக்கு மஞ்சள் மூட்டை களை கொண்டு செல்வதற்கான போக்குவரத்து செலவு, அவ்வாறு கொண்டு சென்றாலும் சந்தையில் திடீரென ஏற்படும் விலை வீழ்ச்சி போன்ற பல்வேறு காரணங்களால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

இதனால், மாவட்டத்தில் மஞ்சள் சாகுபடியின் பரப்பளவு படிப்படியாக குறைந்து வருகிறது.

கள்ளக்குறிச்சி வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ஆண்டுதோறும் பருத்தி வாரச் சந்தை நடந்து வருகிறது.

அதேபோல் கடந்த பல ஆண்டுகளுக்கு முன் மஞ்சள் வார சந்தையும் துவங்கப்பட்டு ஓரிரு ஆண்டு மட்டுமே நடத்தப்பட்டது. வியாபாரிகளின் போதிய ஒத்துழைப்பின்மையால் மஞ்சள் வாரச் சந்தை நடத்துவது கைவிடப்பட்டது.

இதனால் விவசாயிகள், மீண்டும் மஞ்சளை வெளியூர்களுக்கு கொண்டு சென்று விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தற்போது மஞ்சள் அறுவடை செய்யப்படுவதால், வியாபாரிகளை வர வழைத்து தோட்டக்கலை துறையினர் மூலம் மீண் டும் மஞ்சள் வார சந்தையை துவங்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவ்வாறு துவக்கினால் மாவட்டத்தில் மஞ்சள் சாகுபடியின் பரப்பளவு மீண்டும் அதிகரிப்பதற்கு வாய்ப்பு ஏற்படும்.






      Dinamalar
      Follow us