sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கடன் வாங்கி தருவதாக மோசடி: பெண் கைது

/

கடன் வாங்கி தருவதாக மோசடி: பெண் கைது

கடன் வாங்கி தருவதாக மோசடி: பெண் கைது

கடன் வாங்கி தருவதாக மோசடி: பெண் கைது


ADDED : ஏப் 02, 2025 06:24 AM

Google News

ADDED : ஏப் 02, 2025 06:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே நிதி நிறுவனத்தில் கடன் வாங்கி தருவதாக மோசடி செய்த பெண்ணை பிடித்து பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

விருத்தாசலம் அடுத்த விசலுாரை சேர்ந்த திருநாவுக்கரசு மனைவி பானுமதி, 35; இவர், உளுந்துார்பேட்டை, நிதி நிறுவன ஏஜெண்ட் எனக்கூறி, கடன் வாங்கி தருவதாக பலரிடம் பணம் பெற்று, ஏமாற்றி வந்தார். அந்த வகையில் உளுந்துார்பேட்டை அருகே தேன்குணத்தை சேர்ந்த உதயகுமார் மனைவி அனுசுயாவிடம், கடன் வாங்கி தருவதாகவும், முன்பணம் கொடுக்க வேண்டும் என கூறி, 46 ஆயிரத்து 500 ரூபாயை பெற்றார்.

அதேபோல சாமிநாதன் மனைவி தமிழரசியிடம் ரூ. 20,500; நாகராஜ் மனைவி ஜனதாவிடம் ரூ. 7,500; இளங்கோவன் மனைவி பவ்யாவிடம் ரூ 60,000; பாலு மனைவி உமாவிடம் ரூ.10,000; பாலகிருஷ்ணன் மனைவி அஞ்சலையிடம் ரூ.12,000 வாங்கி ஏமாற்றியுள்ளார்.

பணம் கொடுத்தவர்கள் பலமுறை தொடர்பு கொண்ட போதும் போனை எடுக்காமல் இருந்தார்.

இந்நிலையில் தமிழரசி, வேறொரு மொபைல் போன் எண்ணில் பானுமதியை தொடர்பு கொண்டு, கடன் வேண்டும் எனக்கூறி, அவரை உளுந்துார்பேட்டைக்கு வர வைத்தார். விருத்தாசலம் சாலை, தனியார் வங்கி அருகே நேற்று மதியம் 1:00 மணிக்கு பானுமதி வந்தபோது தமிழரசி உள்ளிட்ட பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் அவரை பிடித்து, உளுந்துார்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us