ADDED : மார் 29, 2025 05:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே போலி நகைகளை அடகு வைக்க வந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
உளுந்துார்பேட்டை தாலுகா, எலவனாசூர்கோட்டையை சேர்ந்தவர் நாராயணசாமி மகன் ராஜி, 44; அதே பகுதியில் நகை அடகு கடை வைத்துள்ளார். நேற்று இவரது கடைக்கு வந்த பெண் ஒருவர், அடகு வைக்க நகைகளை கொடுத்தார்.
அவற்றை பரிசோதித்த போது, அனைத்தும் போலியானவை என தெரிந்தது. இதைத்தொடர்ந்து அந்த பெண், எலவனாசூர்கோட்டை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
விசாரணையில், அவர் சேலம் மாவட்டம், நாலிக்கல்பட்டியை சேர்ந்த குமார் மனைவி ஞானாம்மாள் 40 என தெரிந்தது. போலீசார் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர்.