ADDED : டிச 29, 2024 11:10 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தியாகதுருகம்; தியாகதுருகம் பகுதியில் அனுமதியின்றி மதுபாட்டில் விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
தியாகதுருகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயமணி தலைமையிலான போலீசார் வீரசோழபுரம் பகுதியில் நேற்று திடீர் ஆய்வு நடத்தினர். அப்போது வீரசோழபுரம் வடக்கு தெரு பழனிமுத்து மனைவி தமிழரசி, 56; என்பவர் தனது வீட்டில் அரசின் அனுமதியின்றி மதுபாட்டில்களை வைத்து விற்பனை செய்வது தெரிய வந்தது.
தியாகதுருகம் போலீசார் தமிழரசியை கைது செய்து, அவரிடமிருந்து மதுபாட்டில் களை பறிமுதல் செய்தனர்.