ADDED : ஜூன் 09, 2025 11:29 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே குட்கா விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் பரிமளா மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஏமப்பேரைச் சேர்ந்த சேகர் மனைவி கொளஞ்சி, 49; என்பவர் தனது பெட்டிக்கடையில் குட்கா பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரிந்தது.
இதையடுத்து அவரை கைது செய்து, குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.