ADDED : பிப் 11, 2024 03:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
திருக்கோவிலுார் அடுத்த நெடுமுடையான் கிராமத்தைச் சேர்ந்தவர் சேட்டு மனைவி உதயா, 27; மூன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. கடந்த 8ம் தேதி கணவன் மனைவிக்குமிடையே குடும்பத் தகராறு ஏற்பட்டது.
இதில் மனமுடைந்த உதயா பூச்சி மருந்தை குடித்தார். உடன், திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றவர் நேற்று இறந்தார்.
அவரது தாய் இந்திராகாந்தி கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.