ADDED : நவ 07, 2025 11:12 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே வயிற்று வலி தாங்க முடியாததால் பெண் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கள்ளக்குறிச்சி அடுத்த பொற்படாக்குறிச்சியை சேர்ந்தவர் லட்சாதிபதி மனைவி முனியம்மாள், 50; இவருக்கு கடந்த சில வருடங்களாக வயிற்று வலி பிரச்னை இருந்தது. கடந்த 5ம் தேதி, வயிற்று வலி தாங்க முடியாததால், முனியம்மாள் வீட்டில் உள்ள மின்விசிறியில் துாக்கிட்டு கொண்டார். இதைப்பார்த்த அவரது குடும்பத்தினர் முனியம்மாளை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

