sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

டிராக்டர் டிப்பர் மோதி பெண் பலி

/

டிராக்டர் டிப்பர் மோதி பெண் பலி

டிராக்டர் டிப்பர் மோதி பெண் பலி

டிராக்டர் டிப்பர் மோதி பெண் பலி


ADDED : ஜன 12, 2025 06:55 AM

Google News

ADDED : ஜன 12, 2025 06:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் டிராக்டர் டிப்பர் மோதிய விபத்தில் படுகாயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

கள்ளக்குறிச்சி அடுத்த கொங்கராயபாளையத்தை சேர்ந்தவர் வெங்கடாசலம் மகன் நாராயண தாஸ்,40; இவர் தனது மனைவி சித்ரா,38; மகன் ஜீதேஷ்,3; ஆகியோருடன் டி.வி.எஸ்., மொபட்டில் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் கள்ளக்குறிச்சியில் இருந்து வீட்டிற்கு சென்றார்.

ஏ.கே.டி., பள்ளி அருகே கடலுார் நோக்கி சென்ற தனியார் பஸ், நாராயணதாஸ் ஓட்டி சென்ற பைக்கினை முந்தி செல்ல முயன்றது. அப்போது, நாராயணதாஸின் கால் மீது தனியார் மோதியது.

இதில் நாராயணதாஸ் குடும்பத்தினர் நிலைதடுமாறி மொபட்டில் இருந்து கீழே விழுந்தனர். உடன், பஸ்சினை பின் தொடர்ந்தவாறு வந்த டிராக்டர் டிப்பர் எதிர்பாராத விதமாக கீழே விழுந்த சித்ரா மீது மோதியது.

விபத்தில், நாராயணதாஸ் உட்பட அவரது மனைவி சித்ரா, மகன் ஜீதேஷ் படுகாயமடைந்தனர். உடன், அவ்வழியாக சென்றவர்கள் மூவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சித்ரா பரிதாபமாக உயிரிழந்தார்.

புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us