ADDED : ஏப் 11, 2025 06:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னசேலம்: சின்னசேலம் அருகே, விஷம் குடித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சின்னசேலம் அடுத்த தென்பொன்பரப்பியை சேர்ந்தவர் ராஜா மனைவி சித்ரா, 40; குடும்ப தகராறில் கடந்த மார்ச்., 28ம் தேதி மாலை 7:00 மணிக்கு வயலுக்கு பயன்படுத்த வைத்திருந்த களைக்கொல்லியை குடித்து மயங்கினார். அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக குடும்பத்தினர் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது குறித்த புகாரில், சின்னசேலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

