/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மதுபாட்டில் விற்பனை பெண், முதியவர் கைது
/
மதுபாட்டில் விற்பனை பெண், முதியவர் கைது
ADDED : அக் 12, 2025 04:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம் : கள்ளத்தனமாக மதுபாட்டில் விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டு கிராமத்தில் சப் இன்ஸ்பெக்டர் பிரதாப்குமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றார். அப்போது கள்ளத்தனமாக மதுபாட்டில் விற்பனை செய்த ரமேஷ் மனைவி விருதாம்பாள், 40; என்பரை கைது செய்து, 10 குவார்ட்டர் மதுபாட்டில்லை பறிமுதல் செய்தனர். அதேபோல், எஸ்.குளத்துாரில் மதுபாட்டில் விற்பனை செய்த கோவிந்தன், 60; என்பவரை கைது செய்து 10 குவார்ட்டர் மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.