ADDED : அக் 10, 2024 06:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: அவிரியூரில் மாடு முட்டி காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
வாணாபுரம் அடுத்த அவிரியூர் கிராமத்தை சேர்ந்தவர் குப்பன் மனைவி தனம்,56. இவர், கடந்த செப்., 30ம் தேதி மாடு மேய்த்துக்கொண்டிருந்தார். அப்போது மாடு முட்டி, தனம் கீழே விழுந்தார். அவருக்கு கழுத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். புகாரின் பேரில் பகண்டைகூட்ரோடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.