நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கச்சிராயபாளையம் : ஏர்வாய்பட்டிணம் கிராமத்தில் பைக் மோதிய விபத்தில் அடையாளம் தெரியாத பெண் இறந்தார். தியாகதுருகம் அடுத்த புக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னையன் மகன் ராமலிங்கம், 24; இவர், நேற்று முன்தினம் இரவு 7:00 மணியளவில் கச்சிராயபாளையம் - கள்ளக்குறிச்சி சாலையில் பைக்கில் சென்றார்.
ஏர்வாய்பட்டிணம் அருகே சென்ற போது எதிரே நடந்து வந்த அடையாளம் தெரியாத 65 வயது மதிக்கத்தக்க பெண் மீது மோதினார். இதில் பலத்த காயமடைந்த பெண்ணை அருகிலிருந்தவர்கள் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு அவர் நேற்று அதிகாலை 1:00 மணியளவில் இறந்தார். கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து இறந்த பெண் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.