/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தொழிலாளி மாயம்; போலீஸ் விசாரணை
/
தொழிலாளி மாயம்; போலீஸ் விசாரணை
ADDED : டிச 13, 2024 10:38 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னசேலம்; வி.பி., அகரம் கிராமத்தில் காணாமல் போன கூலித் தொழிலாளி குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சின்னசேலம் அடுத்த வி.பி.,அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் இளவரசன், 44; கூலித் தொழிலாளி.
இவர், கடந்த மூன்று மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் கடந்த 6ம் தேதி காலை வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்த புகாரின் பேரில், சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.