ADDED : ஜூன் 04, 2026 09:27 AM
அ நிறம் | அளவு
கள்ளக்குறிச்சி: வரஞ்சரம் அருகே குட்டையில் இறந்த நிலையில் மீட்கப்பட்ட கூலித்தொழிலாளி குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
வரஞ்சரம் அடுத்த நாகலுாரை சேர்ந்தவர் லட்சுமணன் மகன் சின்னதுரை, 52; கூலித்தொழிலாளி. இவர், கடந்த 2ம் தேதி மதியம் வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரை, குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடினர்.
இந்நிலையில், நாகலுார் மணிமுக்தா ஆற்றுக்கு அருகே உள்ள குட்டையில் மிதந்த ஒருவரது உடலை வரஞ்சரம் போலீசார் மீட்டனர். விசாரணையில், இறந்தவர் மாயமான சின்னதுரை என்பது தெரிந்தது. இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
