/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சங்கராபுரத்தில் உலக தியானதினம்
/
சங்கராபுரத்தில் உலக தியானதினம்
ADDED : டிச 23, 2024 05:14 AM

சங்கராபுரம்: சங்கராபுரத்தில் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில் உலக தியான தினம் கொண்டாடப்பட்டது.
சங்கராபுரத்தில் நடந்த உலக தியான தினத்திற்கு மனவளக்கலை மன்ற தலைவர் சீனுவாசன் தலைமை தாங்கினார்.
செயலாளர் முருகன், பொருளாளர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.
100 க்கும் மேற்பட்ட மனவளக்கலை மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு, உலகில் உள்ள அனைவரும் உடல் ஆரோக்கியத்துடனும், மன அமைதியுடனும் ஜாதி மத வேறுபாடின்றி ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தி தியானம் மேற்கொண்டனர்.
நிகழ்ச்சியில் கதிரவன், ஜெய்சங்கர், நடராஜன், பாபு, ரவிச்சந்திரன், வடிவேல், கிருபாகரன், நளினாதேவி, பாத்திமா உட்பட பலர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. மாசிலாமணி நன்றி கூறினார்.