நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உளுந்துார்பேட்டை: திருநாவலுார் அருகே திருமணத்திற்கு விருப்பமில்லாததால் பெண் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
உளுந்துார்பேட்டை அடுத்த ஒடபப்பன்குப்பம் பகுதியை சேர்ந்தவர் முருகவேல் மகள் வித்யா, 25; சென்னை ஸ்ரீபெரும்புதுார் மொபைல்போன் தொழிற்சாலை ஊழியர். இவருக்கு திருமணம் செய்ய பெற்றோர்கள் ஏற்பாடு செய்தனர். ஆனால் வித்யாவிற்கு திருமணம் செய்ய விருப்பமில்லை. இதனால் நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு அருகில் உள்ள முந்திரி காட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வித்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து திருநாவலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

