/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
இளம்பெண் மாயம் : போலீசார் விசாரணை
/
இளம்பெண் மாயம் : போலீசார் விசாரணை
ADDED : நவ 02, 2025 11:29 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே மாயமான இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
சின்னசேலம் அடுத்த கருங்குழி கிராமத்தை சேர்ந்த பெரியசாமி மகள் பிரேமா, 23; இவர் கடந்த 31ம் தேதி அதிகாலை 4:00 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து பல இடங்களில் தேடியும் கிடைக்காததையடுத்து பிரேமாவின் தந்தை பெரியசாமி போலீசில் புகார் செய்தார். இது குறித்த புகாரின் பேரில் கீழ்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

