ADDED : நவ 20, 2024 06:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம் : சங்கராபுரத்தில் மது விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சங்கராபுரம் சப் இன்ஸ்பெக்டர் பிரபு சங்கராபுரம் ஆற்றுப்பாலம் அருகில் ரோந்து சென்றார்.
அப்போது ஆற்றுப்பாலத்தின் கீழ் கள்ளத்தனமாக மது விற்ற சங்கராபுரம் பூட்டை ரோடு முர்த்தி மகன் கண்ணன், 23, என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 12 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையிலடைத்தனர்.