ADDED : ஆக 25, 2025 10:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம், ; சங்கராபுரம் அருகே கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சங்கராபுரம் அடுத்த நெடுமானுார் கிராமத்தில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் நேற்று காலை அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது நெடுமானுார் காட்டுகொட்டாய் சேர்ந்த ஏழைபங்காளன் மகன் குமரேசன், 25; என்பவர் கஞ்சா விற்பனை செய்வது தெரிந்தது. இதனையடுத்து போலீசார் அவரிடமிருந்து 10 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து வழக்கு பதிந்து கைது செய்தனர்.