/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பள்ளி மாணவியை கடத்திய வாலிபர் 'போக்சோ'வில் கைது
/
பள்ளி மாணவியை கடத்திய வாலிபர் 'போக்சோ'வில் கைது
ADDED : நவ 22, 2024 07:08 AM

சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே இளம் பெண்ணைக் கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
சங்கராபுரம் அடுத்த கள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் மகன் அருள்வேல், 24; லாரி டிரைவர். இவர், 16 வயது பள்ளி மாணவியை கடந்த மாதம் 15ம் தேதி கடத்தி சென்றுள்ளார்.
இதுகுறித்த புகாரின் பேரில், சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். அதில், அவர் சிறுமியை திருமணம் செய்து கொண்டு சென்னையில் குடும்பம் நடத்தியது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து சென்னை சென்ற போலீசார், அருள்வேல் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர். சிறுமியை மீட்டு, மருத்துவ பரிசோதனைக்குப் பின், விழுப்புரத்தில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர்.