ADDED : மார் 18, 2025 05:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூங்கில்துறைப்பட்டு, : மூங்கில்துறைப்பட்டு அருகே வாலிபர் துாக்கு போட்டு இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மூங்கில்துறைப்பட்டு அடுத்த மைக்கேல்புரத்தைச் சேர்ந்தவர் சைமன்.
இவரது மகன் லியோ இருதயராஜ், 28; இவர் மீது அதே ஊரை சேர்ந்த எமிலி கிளாரா என்பவர் வீட்டில் நகை திருடியதாக கொடுத்த புகாரில் வடபொன்பரப்பி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர்.
இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த லியோ இருதயராஜ் வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில், வடபொன்பரப்பி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.