sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

லாரி மோதி வாலிபர் பலி

/

லாரி மோதி வாலிபர் பலி

லாரி மோதி வாலிபர் பலி

லாரி மோதி வாலிபர் பலி


ADDED : ஜூன் 01, 2025 04:30 AM

Google News

ADDED : ஜூன் 01, 2025 04:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சின்னசேலம்: செம்பாகுறிச்சி அருகே பைக் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் இறந்தார்.

கடலுார் மாவட்டம், மங்களூர் அடுத்த கச்சிமைலுார் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலு மகன் தேவா, 26; இன்ஜினியரிங் முடித்து விட்டு சிங்கப்பூரில் வேலை செய்து வந்த இவர், கடந்த ஒரு மாதம் முன் சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

இவர், நேற்று முன்தினம் இரவு 11:00 மணியளவில் நைனார்பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று தனது பைக்கில் சொந்த ஊர் திரும்பினார்.

விருத்தாசலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள செம்பாக்குறிச்சி மான்குட்டை பாலம் அருகே சென்றபோது, எதிரே வந்த லாரி தேவா மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த தேவா, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.

புகாரின் பேரில், கீழ்க்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us