sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

தடுப்புக்கட்டையில் பைக் மோதி வாலிபர் பலி

/

தடுப்புக்கட்டையில் பைக் மோதி வாலிபர் பலி

தடுப்புக்கட்டையில் பைக் மோதி வாலிபர் பலி

தடுப்புக்கட்டையில் பைக் மோதி வாலிபர் பலி


ADDED : டிச 29, 2024 06:28 AM

Google News

ADDED : டிச 29, 2024 06:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே செண்டர் மீடியா தடுப்புக்கட்டை மீது பைக் மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

உளுந்தூர்பேட்டை தாலுகா பாதுார் பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் கோகுல், 21; இவர் சென்னையில் உள்ள பழக்கடையில் வேலை செய்து வந்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்திருந்த கோகுல், உறவினரான முத்துவேல் மகன் ரோகித்தை, 17; வீட்டில் இருந்து செங்குறிச்சி டோல்கேட் நோக்கி பைக்கில் உட்கார வைத்து ஓட்டி சென்றார்.

நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் செங்குறிச்சி அருகே தேசிய நெடுஞ்சாலையில் செண்டர் மீடியா தடுப்புக்கட்டை மீது பைக் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். உடன் அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கோகுல் இறந்தார். ரோகித் மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து உளுந்துார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us