/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பைக் மீது சரக்கு வாகனம் மோதி வாலிபர் பலி
/
பைக் மீது சரக்கு வாகனம் மோதி வாலிபர் பலி
ADDED : அக் 05, 2025 03:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே பைக் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்.
கள்ளக்குறிச்சி அடுத்த எஸ்.ஒகையூர் சேர்ந்த வீரமுத்து மகன் ரவி, 31; இவர் நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு எஸ்.ஒகையூரில் இருந்து மீன் பிடிப்பதற்காக பைக்கில் சென்றார். அப்போது, எதிரே வந்த சரக்கு வாகனம் (லோடு ஆட்டோ) பைக் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ரவி சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.