ADDED : ஜூலை 18, 2025 05:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: புதுச்சேரி, பிள்ளைத்தோட்டம் கங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஸ்ரீதரன் மகன் ஸ்ரீவிராஜ், 37; பெங்களூருவில் ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
இவர், சொந்த வேலை காரணமாக கோயம்புத்துார் சென்றவர் நேற்று, அங்கிருந்து புதுச்சேரிக்கு 'டுகாட்டி்' பைக்கில் திரும்பினார்.
நேற்று காலை 8:00 மணிக்கு சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கள்ளக்குறிச்சி, அண்ணா நகர் மேம்பாலம் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த பைக், சாலையின் சென்டர் மீடியனில் மோதியது. இதில், படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
விபத்து குறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.