sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

இளைஞர் நீதி குழும சமூக பணி விண்ணப்பங்கள் வரவேற்பு

/

இளைஞர் நீதி குழும சமூக பணி விண்ணப்பங்கள் வரவேற்பு

இளைஞர் நீதி குழும சமூக பணி விண்ணப்பங்கள் வரவேற்பு

இளைஞர் நீதி குழும சமூக பணி விண்ணப்பங்கள் வரவேற்பு


ADDED : நவ 17, 2024 03:01 AM

Google News

ADDED : நவ 17, 2024 03:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: இளைஞர் நீதிகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இளைஞர் நீதி குழுமத்திற்கு 2 சமூக பணி உறுப்பினர்கள் நியமிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு:

இளைஞர் நீதி சட்டத்தின் விதிமுறைகளின் படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இளைஞர் நீதி குழுமத்திற்கு 2 சமூக நல உறுப்பினர்கள் நியமிக்கப்பட உள்ளனர். தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இப்பதவி அரசு பணி அல்ல. விண்ணப்பதாரர்கள், குழந்தைகள் தொடர்பான உடல் நலம், கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் ஈடுபாடு கொண்டவராக இருக்க வேண்டும். குழந்தை உளவியல், மனநல மருத்துவம், சமூகவியல் அல்லது சட்டம் ஆகியவற்றில் ஏதேனும் பட்டம் பெற்று தொழில் புரிபவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்கு குறையாதவராகவும் 65 வயதை பூர்த்தி செய்யாதவராகவும் இருக்க வேண்டும்.

இதற்கான விண்ணப்ப படிவத்தை கள்ளக்குறிச்சி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் மூலம் பெற்றுக் கொள்ளலாம். அல்லது https://kallakurichi.nic.in வளைத்தளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். வரும் 15 நாட்களுக்குள் இயக்குநர், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை, எண்.300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 600010 என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us