sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கள்ளக்குறிச்சியில் நாளை இளைஞர் திறன் திருவிழா 

/

கள்ளக்குறிச்சியில் நாளை இளைஞர் திறன் திருவிழா 

கள்ளக்குறிச்சியில் நாளை இளைஞர் திறன் திருவிழா 

கள்ளக்குறிச்சியில் நாளை இளைஞர் திறன் திருவிழா 


ADDED : நவ 16, 2024 05:15 AM

Google News

ADDED : நவ 16, 2024 05:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் நாளை 17ம் தேதி நடக்கும் இளைஞர் திறன் திருவிழாவில், இளைஞர், இளம்பெண்கள் பங்கேற்று பயன்பெற கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.

அவரது செய்திக்குறிப்பு:

மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் செயல்படுத்தப்படும் தீனதயாள் உபாத்யாய கிராமின் கவுசல்ய யோஜனா திட்டத்தின் கீழ் இளைஞர் திறன் திருவிழா நாளை 17ம் தேதி நடக்கிறது. கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலை 9:00 மணிக்கு துவங்குகிறது.

இதில் 8ம் வகுப்பிற்கு மேல் கல்வி தகுதியுடை 18 முதல் 35 வயதுக்குட்பட்ட அனைத்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்களும் தங்களுக்கு விருப்பமுள்ள திறன் பயிற்சியை தேர்வு செய்து, பயிற்சியில் இணைந்து பயன்பெறலாம். பின்னர் பயிற்சி வழங்கும் நிறுவனங்கள், வேலை வாய்ப்புக்கு ஏற்பாடுகள் செய்யும்.

மேலும், சுய தொழில் துவங்க ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு உதவத்தக்க அரசு திட்டங்கள் பற்றிய விபரங்கள் குறித்தும் அறிந்து கொள்ளலாம்.

தகுதியான ஆண், பெண் இருபாலரும் தங்களது ஆதார் அட்டை, கல்வித் தகுதி சான்றிதழ்களுடன் பங்கேற்று பயன்பெறலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us