/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
- புகார் பெட்டி நெடுஞ்சாலையில் குவிந்துள்ள மண் குவியல் அகற்றப்படுமா?
/
- புகார் பெட்டி நெடுஞ்சாலையில் குவிந்துள்ள மண் குவியல் அகற்றப்படுமா?
- புகார் பெட்டி நெடுஞ்சாலையில் குவிந்துள்ள மண் குவியல் அகற்றப்படுமா?
- புகார் பெட்டி நெடுஞ்சாலையில் குவிந்துள்ள மண் குவியல் அகற்றப்படுமா?
ADDED : ஜூலை 14, 2025 11:46 PM

---வண்டலுார் -- வாலாஜாபாத் நெடுஞ்சாலை வழியாக, ஒரடகம், வல்லம், ஸ்ரீபெரும்புதுார் சிப்காட் தொழிற்சாலைகளுக்கு செல்லும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் நாள்தோறும் சென்று வருகின்றன. இந்த சாலையில் ஜல்லி மற்றும் எம்-.சாண்ட் ஏற்றி செல்லும் லாரிகளில் இருந்து சரிந்து சாலையோரம் மண் குவிந்துள்ளது.
இதனால், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, இருசக்கர வாகன ஓட்டிகள், சாலையில் குவிந்துள்ள மண் குவியல் மீது செல்லும் போது, எதிர்பாராத விதமாக இடறிவிழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.
எனவே, நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் வகையில் குவிந்துள்ள மண் குவியலை அகற்ற, நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ம.சந்திரசேகர், ஒரகடம்.