sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

1 லட்சம் ருத்ராட்சத்தில் தேர் பவனி வந்த மாணிக்கவாசகர்

/

1 லட்சம் ருத்ராட்சத்தில் தேர் பவனி வந்த மாணிக்கவாசகர்

1 லட்சம் ருத்ராட்சத்தில் தேர் பவனி வந்த மாணிக்கவாசகர்

1 லட்சம் ருத்ராட்சத்தில் தேர் பவனி வந்த மாணிக்கவாசகர்


ADDED : ஜூலை 15, 2024 02:53 AM

Google News

ADDED : ஜூலை 15, 2024 02:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், திருவள்ளுவர் தெருவில், காமாட்சியம்மன் உடனுறை பணாமணீஸ்வரர் கோவிலில், ஒன்பதாவது ஆண்டு மாணிக்கவாசகர் குரு பூஜை விழா நேற்று நடந்தது.

விழாவையொட்டி காலை 6:00 மணிக்கு இடப கொடியேற்றப்பட்டமும், திருவாசகம் முற்றோதலும், காலை 8:30 மணிக்கு, 1,000 பக்தர்களுக்கு ருத்ராட்சம் அணிவிக்கும் நிகழ்வும் நடந்தது.

காலை 9:00 மணிக்கு திருக்குடை உற்சவமும், 108 பால்குட ஊர்வலத்துடன், சிவபூத கைலாச வாத்தியங்கள் இசைக்க, 1 லட்சம் ருத்ராட்சத்தால் செய்யப்பட்ட தேரில் எழுந்தருளிய மாணிக்கவாசக பெருமான், திருவள்ளுவர் தெரு, வி.என்.பெருமாள் தெரு, வரதராஜபுரம் தெரு, மாகாளியம்மன் கோவில் தெரு, பொய்கையாழ்வார்குளம், நேதாஜி தெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் பவனி வந்தார்.

பிற்பகல் 12:00 மணிக்கு பாலாபிஷேகமும், பிற்பகல் 1:00 மணிக்கு அன்னம்பாலிப்பும், மாலை 6:00 மணிக்கு திருவிளக்கு பூஜையும், இரவு 7:00 மணிக்கு மஹா தீபாராதனையும் நடந்தது. விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us