sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

காஞ்சி மாநகராட்சி நிலைக் குழு உறுப்பினர்கள் 10 பேர் ராஜினாமா; 'வளர்ச்சி பணி செய்ய முடியவில்லை' என குற்றச்சாட்டு

/

காஞ்சி மாநகராட்சி நிலைக் குழு உறுப்பினர்கள் 10 பேர் ராஜினாமா; 'வளர்ச்சி பணி செய்ய முடியவில்லை' என குற்றச்சாட்டு

காஞ்சி மாநகராட்சி நிலைக் குழு உறுப்பினர்கள் 10 பேர் ராஜினாமா; 'வளர்ச்சி பணி செய்ய முடியவில்லை' என குற்றச்சாட்டு

காஞ்சி மாநகராட்சி நிலைக் குழு உறுப்பினர்கள் 10 பேர் ராஜினாமா; 'வளர்ச்சி பணி செய்ய முடியவில்லை' என குற்றச்சாட்டு


ADDED : ஜூலை 02, 2024 03:19 AM

Google News

ADDED : ஜூலை 02, 2024 03:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு, 2022ல் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், 51 வார்டுகளுக்கும் கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேயராக தி.மு.க.,வைச் சேர்ந்த மகாலட்சுமியும், துணை மேயராக காங்., கட்சியைச் சேர்ந்த குமரகுருநாதனும் தேர்வு செய்யப்பட்டனர்.

மேயர் மகாலட்சுமி மீது அ.தி.மு.க., மட்டுமல்லாமல், தி.மு.க.,- - காங்., - சுயேட்., என, 33க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் அதிருப்தி தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், ஜூன் 7ம் தேதி, மேயர் மகாலட்சுமி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர, தி.மு.க., - -அ.தி.மு.க, என கவுன்சிலர்கள் 33 பேர், கலெக்டர் கலைச்செல்வியிடம் மனு அளித்தனர்.

திட்டவட்டம்


இந்த விவகாரம், மேயர் மகாலட்சுமிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. அதிருப்தி திமுக கவுன்சிலர்களை அழைத்து, அமைச்சர் நேரு, மாவட்ட செயலர் சுந்தர் என, மூத்த நிர்வாகிகள் பேச்சு நடத்தியும், மேயர் மகாலட்சுமியை மாற்ற வேண்டும் என, கவுன்சிலர்கள் பலரும் திட்டவட்டமாக உள்ளனர்.

மாநகராட்சி கூட்டம் ஜூன் மாதம் நடக்காத நிலையில், ஜூலை மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, மாநகராட்சி நிலைக் குழுவின் உறுப்பினர்கள், 10 பேர் திடீரென தங்களது பதவியை ராஜினாமா செய்திருப்பது, காஞ்சிபுரம் மாநகராட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாநகராட்சியில், பணிக்குழு, நகரமைப்புக்குழு, சுகாதாரக்குழு, கணக்குக்குழு, வரிவிதிப்புக் குழு, கல்விக்குழு, நியமனக்குழு என, ஆறு நிலைக் குழுக்கள் உள்ளன. ஒவ்வொரு குழுவுக்கும் தலைவர், உறுப்பினர்கள் 6 பேர் நியமிக்கப்பட்டிருந்தனர்.

பாதாள சாக்கடை


சில மாதங்களுக்கு முன்பாக, கவுன்சிலர்களிடையே ஏற்பட்ட பிரச்னைகள் காரணமாக, பணிக்குழு உறுப்பினர்கள் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, அதன் தலைவர் சுரேஷ் பதவியை இழந்தார்.

இதைத் தொடர்ந்து, பிற நிலைக் குழுவின் உறுப்பினர்கள், 7 தி.மு.க.,வினர் உட்பட 10 கவுன்சிலர்கள், நிலைக்குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து, கமிஷனர் செந்தில்முருகனிடம் ராஜினாமா கடிதத்தை நேற்று அளித்துள்ளனர்.

ராஜினாமா செய்த 23வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் புனிதா கூறுகையில், ''சுகாதார குழுவில் உறுப்பினராக இருந்த போதும், எங்களது வார்டில் பாதாள சாக்கடை மற்றும் பிற வளர்ச்சி பணிகளை செய்ய முடியவில்லை.

''வளர்ச்சி பணிகளை சுதந்திரமாக மேற்கொள்ள முடியாத காரணத்தால், நிலைக்குழு உறுப்பினர் பதவியிலிருந்து ராஜினாமா செய்கிறோம்,'' என்றார்.

ராஜினாமா செய்த கவுன்சிலர்கள்

தி.மு.க., கவுன்சிலர்கள் அஸ்மாபேகம், குமரன், சரளா, பிரியா, ஷோபனா, ரமணி, சங்கர் ஆகிய ஏழு பேர், சுயேட்சை கவுன்சிலர் பானுப்பிரியா, அ.தி.மு.க., கவுன்சிலர் புனிதா, பா.ம.க., கவுன்சிலர் சரஸ்வதி ஆகிய 10 பேரும், நிலைக் குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து கடிதம் கொடுத்துள்ளனர்.








      Dinamalar
      Follow us