/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தொழிலாளி வீட்டில் 12 சவரன் நகை மாயம்
/
தொழிலாளி வீட்டில் 12 சவரன் நகை மாயம்
ADDED : செப் 02, 2024 10:25 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்றத்துார்: குன்றத்துார், காமராஜர் நகரைச் சேர்ந்தவர் பிரகாஷ், 38; கட்டட தொழிலாளி. இவரது மனைவி சரஸ்வதியின் நகைகள் 12 சவரன், 300 கிராம் வெள்ளி கொலு, துணி பையில் சுற்றி, வீட்டில் வைத்திருந்தனர்.
நேற்று முன்தினம் இரவு, இப்பையை எடுத்து பார்த்தபோது, அதில் வைத்திருந்த நகைகள், கொலுசு ஆகியவை மாயமானது தெரிந்தது.
பிரகாஷ் வீட்டிற்கு வந்து, தங்கி சென்ற உறவினர்கள் குறித்து, குன்றத்துார் போலீசார்விசாரிக்கின்றனர்.