sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் 15 சவரன் திருட்டு

/

தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் 15 சவரன் திருட்டு

தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் 15 சவரன் திருட்டு

தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் 15 சவரன் திருட்டு


ADDED : மே 10, 2024 11:35 PM

Google News

ADDED : மே 10, 2024 11:35 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுாரில் தனியார் நிறுவன மேலாளர் வீட்டின் பூட்டை உடைத்து, 15 சவரன் தங்கம் மற்றும் 200 கிராம் வெள்ளி நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ஸ்ரீபெரும்புதுார் செல்வப்பெருமாள் நகர், மூன்றாவது தெருவைச் சேர்ந்தவர் இளவரசன், 40; தனியார் நிறுவன மேலாளார். மனைவி மற்றும் மகனுடன் தங்கி, வல்லம் சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்து வருகிறார்.

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதால், மனைவி சுகன்யா மற்றும் மகன் ரோஹித் இருவரும், கடந்த மாதம் சொந்த ஊரான மேட்டூர் சென்ற நிலையில், இளவரசன் தனியாக வீட்டில் இருந்து வந்தார்.

நேற்று காலை இளவரசன் வழக்கம் போல் வேலைக்கு சென்று மாலை வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு, 17 சவரன் தங்கம் மற்றும் 200 கிராம் வெள்ளி நகைகள் திருடு போனது தெரிந்தது.

இதுகுறித்து, இளவரசன் ஸ்ரீபெரும்புதுார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிந்த போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us