sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

151 நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை

/

151 நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை

151 நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை

151 நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை


ADDED : மே 02, 2024 10:25 PM

Google News

ADDED : மே 02, 2024 10:25 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:தமிழகத்தில் மே 1ம் தேதி, தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், உள்ள தனியார் தொழில் நிறுவனங்கள், உணவக நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, சம்பளத்துடன் விடுமுறை வழங்கப்பட வேண்டும் என, தொழிலாளர் நலத்துறையினர் முன்னதாகவே அறிவுறுத்தியிருந்தனர்.

இருப்பினும், பல்வேறு நிறுவனங்கள் மே 1ம் தேதி விடுமுறை அளிக்கவில்லை என புகார் எழுந்தது. எனவே, தொழிலாளர் நலத்துறையின், அமலாக்கப்பிரிவின் உதவி இயக்குனர் சுதா தலைமையிலான குழுவினர், மே 1ம் தேதி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள தனியார் நிறுவனங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, ஊழியர்களுக்கு விடுப்பு அளிக்காத, 57 தனியார் தொழில் நிறுவனங்கள் மற்றும் 94 உணவக நிறுவனங்கள் என, 151 நிறுவனங்கள் கண்டறியப்பட்டன.

அந்நிறுவன உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக உதவி இயக்குனர் சுதா தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us