sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

காஞ்சி வரதர் கோவிலில் 15ல் ஆனி கருடன் உற்சவம்

/

காஞ்சி வரதர் கோவிலில் 15ல் ஆனி கருடன் உற்சவம்

காஞ்சி வரதர் கோவிலில் 15ல் ஆனி கருடன் உற்சவம்

காஞ்சி வரதர் கோவிலில் 15ல் ஆனி கருடன் உற்சவம்


ADDED : ஜூலை 10, 2024 10:59 PM

Google News

ADDED : ஜூலை 10, 2024 10:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், வைகாசி பிரமோற்சவத்தின் மூன்றாம் நாள் உற்சவத்தின்போது, கருட சேவை உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறும். இந்த உற்சவத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர்.

இதேபோல், ஆனி, ஆடி மாதங்களில், வரதராஜ பெருமாள் கோவிலில் கருட சேவை உற்சவம் நடக்கிறது. அதன்படி ஆனி மாதத்திற்கான ஆனி கருடன் உற்சவம் வரும் 15ம் தேதி மாலை 6:00 மணிக்கு நடைபெறுகிறது.

இதையொட்டி அன்று மாலை 5:30 மணிக்கு, பெருமாள் கண்ணாடி அறையில் இருந்து வாகன மண்டபத்திற்கு எழுந்தருள்கிறார். தொடர்ந்து, கருடவாகனத்தில் எழுந்தருளும் வரதராஜ பெருமாள், ஆழ்வார் பிரகாரமாக வலம் வந்து மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

மாட வீதி புறப்பாடு முடிந்து, இரவு 8:00 மணிக்கு பெருமாள் கோவில் வாகன மண்டபத்தில் எழுந்தருள்கிறார். இரவு, பெரியாழ்வார் சாற்றுமறை உற்சவம் நடக்கிறது.






      Dinamalar
      Follow us