/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
இன்று 'குரூப் - 2' தேர்வு 17,943 பேர் விண்ணப்பம்
/
இன்று 'குரூப் - 2' தேர்வு 17,943 பேர் விண்ணப்பம்
ADDED : செப் 13, 2024 08:36 PM
காஞ்சிபுரம்:தொழிலாளர் உதவி ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சார் - -பதிவாளர் உள்ளிட்ட 'குரூப்- - 2' பதவிகளுக்கு 507 காலியிடங்கள் உள்ளன.
அதேபோல், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், ஹிந்து அறநிலைய ஆட்சித் துறை தணிக்கை ஆய்வாளர் உள்ளிட்ட 'குரூப் - -2ஏ' பதவிகளில் 1,820 காலியிடங்கள் என, மொத்தம் 2,327 இடங்களை நிரப்ப குரூப் -2 மற்றும் குரூப்- 2ஏ தேர்வுக்கான அறிவிப்பு, கடந்த ஜூன் மாதம் அறிவிப்பு வெளியிட்டது.
முதல்கட்ட தேர்வான முதல்நிலை தேர்வு, செப்., 14ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, முதல்நிலை தேர்வு இன்று தமிழகம் முழுதும் நடக்கிறது. தமிழகம் முழுதும் 8 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில், 17,943 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் முழுதும், 45 மையங்களில், 65 ஹால்களில் தேர்வு நடக்கிறது. தேர்வை கண்காணிக்க, 16 மொபைல் டீம், நான்கு பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.