நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாலாஜாபாத்:வாலாஜாபாத் பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய மாணவி பிளஸ் 2 பயின்று வந்தார். இவர், நேற்று முன்தினம் மாலை கடைக்கு செல்வதாக கூறி சென்றவர் பின் வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களது வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து மாணவியின் தாயார் அளித்த புகாரின்படி, வாலாஜாபாத் போலீசார் விசாரிக்கின்றனர்.
இதேபோன்று, காஞ்சிபுரம் ஒன்றியம், ஆர்ப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த 19 வயதுடைய மாணவி, உத்திரமேரூர் அடுத்த, திருப்புலிவனம் அரசு கலைக் கல்லூரியில் 2ம் ஆண்டு பயின்று வந்தார்.
நேற்று முன்தினம் காலை, கல்லூாரி செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து, மாணவியரின் தந்தை அளித்த புகாரின்படி, மாகரல் போலீசார் விசாரிக்கின்றனர்.

