sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

579 ஏரிகளில் 25 சதவீதம் நீர் இல்லை காஞ்சிபுரம் விவசாயிகளுக்கு சிரமம்

/

579 ஏரிகளில் 25 சதவீதம் நீர் இல்லை காஞ்சிபுரம் விவசாயிகளுக்கு சிரமம்

579 ஏரிகளில் 25 சதவீதம் நீர் இல்லை காஞ்சிபுரம் விவசாயிகளுக்கு சிரமம்

579 ஏரிகளில் 25 சதவீதம் நீர் இல்லை காஞ்சிபுரம் விவசாயிகளுக்கு சிரமம்


ADDED : ஜூலை 05, 2024 12:04 AM

Google News

ADDED : ஜூலை 05, 2024 12:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் ஊரக வளர்ச்சித் துறை மற்றும் நீர்வளத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 761 ஏரிகளில், 579 ஏரிகளில், 25 சதவீதம் தண்ணீர் கூட இல்லாத நிலை உள்ளது.

தமிழகத்தில் ஏரிகள் நிறைந்த மாவட்டமாக காஞ்சிபுரம் உள்ளது. ஏரி பாசனத்தை நம்பி, காஞ்சிபுரம் மாவட்டம் முழுதும் பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயிரிடப்படுகின்றன.

இத்தகைய சூழலில், ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் ஏற்படும் வறட்சி காரணமாக, ஏரிகளில் தண்ணீர் வெகுவாக குறைந்து, விவசாயத்திற்கு சிக்கலை ஏற்படுத்துகிறது.

நவரை பருவம் முடிந்த நிலையில், சொர்ணாவாரி, சம்பா ஆகிய பருவத்திற்கு தேவையான தண்ணீர், ஏரிகளில் இல்லாததால், விவசாயிகள் செய்வதறியாமல் புலம்பி வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஊரக வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டில், 380 ஏரிகள் உள்ளன. இதில், 60 ஏரிகளில் 25- - 50 சதவீதம் தண்ணீர் உள்ளது.

மீதமுள்ள 320 ஏரிகளிலும், 25 சதவீதத்திற்கும் குறைவாகவே தண்ணீர் இருப்பதாக வேளாண் துறையினர் தெரிவிக்கின்றனர்.

அதேபோல, நீர்வளத் துறை கட்டுப்பாட்டில், 381 ஏரிகள் உள்ளன. இதில், 50- - 75 சதவீதம்வரை 29 ஏரிகளும், 25- - 50 சதவீதம் வரை 93 ஏரிகளிலும் தண்ணீர் உள்ளது.

மீதமுள்ள 259 ஏரிகளிலும், 25 சதவீதத்திற்கும் குறைவாகவே தண்ணீர் இருப்பு உள்ளது தெரியவந்துள்ளது.

ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை ஆகிய இரு துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள 761 ஏரிகளில், 579 ஏரிகளில், 25 சதவீதம் தண்ணீர்கூட இல்லாத நிலையே இப்போது உள்ளது.






      Dinamalar
      Follow us