/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உத்திரமேரூர் அரசு கலை கல்லுாரியில் 26ல் இரண்டாம் கட்ட கலந்தாய்வு துவக்கம்
/
உத்திரமேரூர் அரசு கலை கல்லுாரியில் 26ல் இரண்டாம் கட்ட கலந்தாய்வு துவக்கம்
உத்திரமேரூர் அரசு கலை கல்லுாரியில் 26ல் இரண்டாம் கட்ட கலந்தாய்வு துவக்கம்
உத்திரமேரூர் அரசு கலை கல்லுாரியில் 26ல் இரண்டாம் கட்ட கலந்தாய்வு துவக்கம்
ADDED : ஜூன் 23, 2024 02:03 AM
காஞ்சிபுரம் : உத்திரமேரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 2024- - 25ம் கல்வி ஆண்டிற்கான இளநிலை பட்டப் படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு வரும் 26ம் தேதி துவங்குகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கல்லுாரி முதல்வர் முனைவர் சுகுமாரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
உத்திரமேரூர் அடுத்த, திருப்புலிவனத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர்., அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 2024- - 25ம் கல்வி ஆண்டிற்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு வரும் 26ம் தேதி துவங்கி 28ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதில், பி.சி., பி.சி.எம்., எஸ்.சி.ஏ., எஸ்.டி., பிரிவைச சேர்ந்த இக்கல்லுாரிக்கு விண்ணப்பித்த மாணவ-மாணவியர் அனைவரும் பங்கேற்கலாம்.
ஜூன் 26ம் தேதி அறிவியல் பாடப்பிரிவுகளான பி.எஸ்சி., கணிதம், கணினி அறிவியல், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும், 27ம் தேதி பி.காம்., மற்றும் பி.ஏ., பொருளியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும், 28ம் தேதி பி.ஏ., தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.
மேலும் விபரங்களுக்கு www.gascuthiramerur.ac.in என்ற கல்லுாரியின் இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளாலம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.