sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பெண் போலீசிடம் தகராறு வாலிபர்கள் 3 பேர் கைது

/

பெண் போலீசிடம் தகராறு வாலிபர்கள் 3 பேர் கைது

பெண் போலீசிடம் தகராறு வாலிபர்கள் 3 பேர் கைது

பெண் போலீசிடம் தகராறு வாலிபர்கள் 3 பேர் கைது


ADDED : ஜூன் 10, 2024 05:01 AM

Google News

ADDED : ஜூன் 10, 2024 05:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : தண்டையார்பேட்டை, வைத்தியநாதன் மேம்பாலம் அருகே போலீஸ் இன்ஸ்பெக்டர் கமலாதேவி தலைமையில், உதவி ஆய்வாளர் மாரியப்பன், போலீஸ்காரர்கள் ரஞ்சித் ஆகியோர் நேற்று முன்தினம் நள்ளிரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது பைக்கில் மதுபோதையில் வந்த மூவரிடம் விசாரித்தனர். அவர்கள், கொடுங்கையூர், அன்னை சத்யா நகர், 2வது தெருவைச் சேர்ந்த புஷ்பராஜ், 23, ராஜ், 25, பிரசாந்த், 21, என்பது தெரியவந்தது.

மதுபோதையில் பைக் ஓட்டி வந்ததால், பைக்கை ஒப்படைத்துவிட்டு காலையில் வந்து பெற்றுக் கொள்ளுமாறு போலீசார் தெரிவித்தனர்.

இதனால், ஆத்திரம் அடைந்த போதை ஆசாமிகள் போலீசாருக்கு மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து, மூவரையும் ஆர்.கே.நகர் காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

அங்கு, பிரசாந்தின் பெற்றோரை வரவழைத்து எழுதி வாங்கி எச்சரித்து அனுப்பினர். புஷ்பராஜ், ராஜ் இருவரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us