/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மக்களுடன் முதல்வர் முகாம் 324 மனுக்கள் குவிந்தன
/
மக்களுடன் முதல்வர் முகாம் 324 மனுக்கள் குவிந்தன
ADDED : ஆக 21, 2024 09:00 PM
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம் மலையாங்குளம், காட்டாங்குளம், வாடாதவூர், நெய்யாடுவாக்கம், காவாம்பயிர் ஆகிய ஊராட்சிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்ட முகாம், மலையாங்குளம் கிராமத்தில் நேற்று நடந்தது.
உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் பங்கேற்று முகாமை துவக்கி வைத்தார். வருவாய்த்துறை, ஆதிதிராவிட நலத்துறை, சமூக நலத்துறை, கூட்டுறவுத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, தமிழ்நாடு மின்சார வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.
முகாமில் 324 மனுக்கள் பெறப்பட்டன. உத்திரமேரூர் பி.டி.ஓ., லோகநாதன் மற்றும் சாலவாக்கம் தி.மு.க., ஒன்றிய செயலர் குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.