sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

ஏர்போர்ட்டில் கடத்தல் அதிகரிப்பு 440 கிலோ தங்கம் பறிமுதல்

/

ஏர்போர்ட்டில் கடத்தல் அதிகரிப்பு 440 கிலோ தங்கம் பறிமுதல்

ஏர்போர்ட்டில் கடத்தல் அதிகரிப்பு 440 கிலோ தங்கம் பறிமுதல்

ஏர்போர்ட்டில் கடத்தல் அதிகரிப்பு 440 கிலோ தங்கம் பறிமுதல்


ADDED : மே 09, 2024 12:30 AM

Google News

ADDED : மே 09, 2024 12:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:சென்னை விமான நிலையத்தில் கடந்த நிதி ஆண்டில், 440 கிலோ தங்கம், 42.68 கிலோ போதை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சென்னை விமான நிலையத்தில் பயணியரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதற்காக, பல்வேறு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மற்றொருபுறம் தங்கம், போதை பொருள், வெளிநாட்டு கரன்சி, வெளிநாட்டு அரிய வகை வன உயிரினங்கள் கடத்தல் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.

துபாய், அபுதாபி சார்ஜா, குவைத், இலங்கை உள்ளிட்ட இடங்களில் இருந்து தங்கம், ஆப்ரிக்க நாடுகளில் இருந்து போதை பொருள், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து அரிய வகை வன உயிரினங்கள் கடத்தி வரப்படுகின்றன.

சென்னையில் இருந்து துபாய், சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு வெளிநாட்டு கரன்சி கடத்தப்படுகிறது.

சென்னை விமான நிலையத்தில், சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி, கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்து, கடத்தல் ஆசாமிகளை கைது செய்கின்றனர்.

கடந்த 2023 - 24ம் நிதி ஆண்டில், 440 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு, 248 கோடி ரூபாய்.

அதுபோல், 192 கோடி ரூபாய் மதிப்புடைய 42.68 கிலோ போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 19.44 கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள், 150க்கும் மேற்பட்ட வெளிநாட்டு அரிய வகை உயிரினங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள்

ஆண்டு தங்கம் போதை பொருட்கள் வெளிநாட்டு கரன்சி(மதிப்பு ரூபாயில்)2021-22 144.55 கிலோ - 33.72 கிலோ - 7.53 கோடி 2022-23 291 கிலோ - 21.39 கிலோ - 10.47 கோடி2023-24 440 கிலோ - 42.68 கிலோ - 19.44 கோடி



நேற்றும் சிக்கியது 4 கிலோ தங்கம்


மலேஷியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம், நேற்று காலை சென்னை வந்தது. அதில் குஜராத் மாநிலத்தை சேர்ந்த இரண்டு தம்பதி, இரண்டு குழந்தைகள்என மொத்தம் ஆறு பேர் வந்தனர்.
அவர்களிடம் விசாரித்த போது வீட்டு வேலைக்காக மலேஷியா சென்றதாகவும், வேலை பிடிக்காததால், திரும்பி வந்து விட்டதாகவும் கூறினர்.அவர்களை அதிகாரிகள் பரிசோதித்த போது, நான்கு பேரின் உள்ளாடைகளுக்குள் தலா 1 கிலோ வீதம், 4 கிலோ தங்க கட்டிகளை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து, மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள், நான்கு பேரையும் கைது செய்து, தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர்.








      Dinamalar
      Follow us